பரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்...

Wednesday, March 31, 2010

இன்று CNN சானலில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். ஐரோப்பிய நாடுகளின் கத்தோலிக்க தேவாலயங்களில் பரவலாக நடைபெரும், சிறுவர்கள் மேல் பாதிரிகளால் நிகழ்த்தப்படும் பாலில் வன்முறை தான் இன்றைய அவர்களின் தலைப்பு. பாதிக்கப்பட்ட சிலரின் பேட்டிகளும் காட்டப்பட்டன.

அந்த நிகழ்ச்சியில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட விஷயம், '200 காதுகேளாத சிறுவர்களிடம் பாலியல் வன்முறை செய்தும், அந்த பாதிரிகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத போப்பை என்ன செய்யலாம்?' என்பதே. அயர்லாந்து, ஜெர்மனி போன்ற பல நாடுகளிலும் இப்படி தான் நடந்துள்ளது. உயர் பதவியில் இருப்பவர்களும் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுபவர்களும் இந்த பாலியல் கொடுமைகளை மூடிமறைக்கப்பார்த்துள்ளனர். லண்டனில் இந்த வன்கொடுமையை எதிர்த்து மக்கள் பேரணி நடக்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

சரி இதற்கும் நித்யானந்தருக்கும் என்ன சம்பந்தம்? இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சானல் நமது சன் டிவியை விடவும் நக்கீரனை விடவும் பல மடங்கு புகழ் பெற்றதும், அதிகாரம் உள்ளதுமாகும். அவர்கள் நினைத்திருந்தால் சுட சுட வீடியோ பதிவோ, கிளுகிளுப்பான படங்களையோ ஆள் வைத்து செட் செய்து படம் பிடித்து காட்டியிருக்கலாம். ஆனால் அவர்கள் நடந்த உண்மையை பாதிக்கப்பட்டவர்கள் மூலமாவே பேசவைத்து அந்த கொடுமையின் தாக்கத்தை உணர வைத்தார்கள். அதுவும் இதைப்போன்ற ஆன்மிக விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று, ப்ரா ஜட்டியோடு கடற்கரையில் கூச்சமே இல்லாமல் ஆணும் பெண்ணும் ஒன்றாக படுத்திருக்கும் கலாச்சாரம் கொண்ட அவனுக்கு தெரிகிறது; நம் மக்களுக்கு கேவலமான விளம்பரம் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது.

அதே போல் இங்கே நித்யானந்தரும் அந்த பெண்ணும் ஒருவருக்கொருவர் இயைந்து செய்த செயலை இங்கே ஹிந்து மதத்தை சேர்ந்த பல பெரியவர்களும் எதிர்த்தார்கள். ஆனால் அங்கே நடக்கும் பாலியல் கொடுமைகளை போப் மூடி மறைக்கப்பார்க்கிறார். எல்லாவற்றையும் துறந்த போப்பிற்கு, பாவம் பதவி ஆசையை மட்டும் துறக்க மனம் வரவில்லை போலும். இத நாம கேட்டோம்னா, "மனிதர்கள் ஆசை படக்கூடாதுன்னு புத்தரே ஆசைப்பட்டார்ல, தள்ளாத வயதில் ஒரு சிறுபான்மை முதியவரை இப்படி துன்புறுத்தலாமா?" அப்படி இப்படின்னு எதாவது கவிதை எழுதி காலையில் முரசில் ஒலி எழுப்பி விடுவார்கள்.

நல்ல வேலை, ஐரோப்பா இந்தியாவிலோ, தமிழகத்திலோ இல்லை. பரமஹம்சனோ பாதிரியோ, கடவுளை நம்பாமல் இந்த மாதிரி போலி தூதுவர்களை நம்பினால் நம் மதத்துக்கும் கடவுளுக்கும் தான் அசிங்கம்.

7 comments

  1. நல்லா சொன்னீங்க ரேட்டிங் போச்சுன்னா...நாம் நாம் தான்..வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. anne namkku enne pollapu intha mathiri sonna nama adipadivathigal aiduvom. on serious note. its good one

    ReplyDelete
  3. europela mattum illa, indiavilaye niraya nadkuthu intha mathiri athellam yaru padam edukarathu?>

    ReplyDelete
  4. முறையான கோணத்தில் நித்தியானந்தர் விடயத்தை உங்களது முன்னைய பதிவு நோக்கியிருப்பது கண்டேன்.இப்பதிவு வெளிநாட்டு ஊடகங்களுக்கு உள்ள நாகரீகத்தை நமது ஊடகங்களுக்கு விளக்க முனைகின்றது. என்ன பயன்? செவிடன் காதில் ஊதிய சங்கு போல்த்தான் நமது ஊடகங்களுக்கு சொல்லும் உபதேசம்!!! அதுவும் சண்/கலைஞர் தொலைக்காட்சி குழுமங்களுக்கு!!!

    மக்கள் உணர்ந்து கொண்டால் அதுவே திருப்தியளிக்கும்.

    உங்களுடைய இப்பதிவுகளுக்கு இணைப்புக் கொடுத்துள்ளேன்.
    http://thiviyaranchiniyan.blogspot.com/2010/04/blog-post.html

    வாழ்த்துகள்

    ReplyDelete
  5. மக்களுக்கு இந்து மதத்தின் மகிமையை புரியவைக்க நித்தியானந்தர் தேவையில்லை. ஆனால் அவர்களுக்கு பாதிரியார்கள் தேவைப்படுகின்றார்கள்.

    உலகத்திலேயே இல்லறத்தை நல்லறமாக நடத்தினால் கடவுளை அடையலாம் என்று சொல்லுகிற ஒரே மதம் இந்துமதம். மக்களுக்கு இருக்கும் பிரம்மச்சரிய மேன்மை பற்றிய எண்ணங்களை இந்த விசயங்கள் தகர்த்துள்ளது.

    அப்துல் கலாமும், வாஜ்பேயும் கூட பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ்கின்றனர். ஊருக்கே உபதேசம் செய்யும் மத பரப்புனர்கள் வாழவில்லையே என்பது மக்களுக்கு புரிந்திருக்கிறது.

    தமிழகத்தையும் உலகையும் ஒப்பிட்டால் நமக்கு வேதனை தான் மிஞ்சும்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  6. nanbarey umaku yen ivalavu pira matha verupu.. oru naatil ethu perumpaanmayana mathamo athai pathi than anaivarum vimarsipargal.. naam americavil irunthu kondu hindu mathathai patri pesa mudiyathu. angu krithava mathathai patri thaney vimarsika mudium?? jaathiyai matum ethirkum neengal matra mathangalai kadumayaga saaduvathu yen?? ungalukum jaathi veri pidithavanukum entha verupaadum ilai enai porutha varai.. irandum orey vagaiyana veriye.

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One