சசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க?

Thursday, May 27, 2010


கல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண வீட்டில் ஸ்பீக்கர் செட் வைத்து பாட்டு போடுவதோடு நின்று விடும். சில வருடங்களாக ப்ளெக்ஸ் போர்டு கலாச்சாரம் அதிகரித்துள்ளது.

அதிலும் இவர்கள் ப்ளெக்ஸ் போர்டில் செய்யும் அலப்பரைகள் தாங்க முடியவில்லை. அரசியல் கட் அவுட்டுகளை விட இவை மிகவும் அசிங்கமாக உள்ளன. ரஜினி, கமல், விஜய், அஜித் என்று தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களை அதில் அச்சடித்து வாழ்த்து சொல்வார்கள். இப்போது ஒரு சில நடிகர்களின் படத்தை போட்டு தங்கள் ஜாதியின் பெயரை கீழே "இவண்" என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

எங்கள் ஊர் பக்கம் சரத்குமாரும் காமராஜரும் இணைந்தே போஸ் கொடுப்பார்கள். அதே போல கார்த்திக் முத்துராமலிங்க தேவர், அல்லது அஜித் முத்துராமலிங்க தேவர் காம்பினேசன் இருக்கும். அஜித் எந்த விதத்தில் தேவர் சமூகத்திற்கு சொந்தம் என்று இப்போது வரை எனக்கு தெரியவில்லை. கொங்கு நாடு பக்கம் சூர்யா, சத்யராஜை எல்லாம் யூஸ் பண்ணுவாங்களோ? விக்ரமும் பிரசாந்தும் (சில சமயம் விஜய்யும்) பட்டியலிடப்பட்ட மக்களின் விசேசங்களில் சிரிக்கிறார்கள். இப்போது இந்த லிஸ்டில் நம்ம சசிக்குமாரையும் சேர்த்துக்கொண்டுவிட்டார்கள். இரண்டு நாட்களுக்கு முன் சசிக்குமாரின் படம் அச்சடித்திருந்த ஒரு ப்ளெக்ஸ் போர்டில் "அழகு முத்து கோன் படை" என்று இருந்தது.

'எப்படிய்யா கண்டு புடிக்குறீங்க?' என்று தான் முதலில் யோசிக்க தோன்றுகிறது.
ஒரு நடிகன் இன்ன ஜாதி தான் என்று எப்படி மக்கள் கண்டுபிடிக்கிறார்கள்? நான் பி.எஸ்ஸி., படித்த கல்லூரி கிராமப்புறம் இருந்தது. சுற்று வட்டார கிராம தேவரின மாணவர்களும் டவுன் நாடார் மாணவர்களும் அதிகமாக இருந்தனர். ஒருவன் இயக்குனர் கெளதம் மேனனை நாடார் என்றே நினைத்துக்கொண்டிருந்தான் (வேட்டையாடு விளையாடு படத்துல திருநெல்வேலி காட்டிருக்காரு, சரத் குமார வச்சு படம் எடுத்துருக்காருல?). மேனன் என்பது ஒரு சாதிப்பெயர் என்பது கூட தெரியாமல் அவன் ஜாதி மட்டுமே உலகில் இருப்பதாக நினைத்துக்கொண்டான். ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது நான் ஒரு அஜித் ரசிகன் என்றேன். "அப்போ நீங்க நம்மாளா பாஸு?" என்று சொந்தமாக்கிக்கொள்ளும் உணர்வுடன் ஒருவன் கேட்டான். ஒரு நடிகனின் ரசிகனாக இருப்பதில் எவ்வளவு criteria உள்ளது என்று நான் அப்போது தான் உணர்ந்தேன். நல்ல வேலை எனக்கு பிரசாந்த் பிடிக்கும் என்று சொல்லவில்லை; சொல்லியிருந்தால் எனக்கு தாகத்திற்கு தண்ணீர் கூட குடுத்திருக்க மாட்டார்கள். கல்லூரியிலேயே எவ்வளவு ஜாதி வெறி பாருங்கள்? கிராமம் என்று இல்லை, பல நகரங்களிலும் இதே நிலை தான். நான் மதுரையில் MBA படித்த போது ஒருவன் சொன்னான், "காந்திஜி எங்க வாணியர் ஜாதிக்காரர்டா" என்று. 'அடப்பாவிகளா!!!!!!!!' என்று நினைத்துக்கொண்டேன். இந்த லாஜிக்கில் தான் பட்டியலிடப்பட்டோர் அம்பேத்கரை தங்கள் ஒவ்வொரு ஜாதியிலும் இணைத்துக்கொண்டார்களோ?

மிகவும் அவமானமும் அதிர்ச்சியாகவும் உள்ளது இந்த நிலையை பார்க்கும் போது. மற்ற பெரும்பான்மை ஜாதியினர் தங்களுக்கு என்று ஒரு நடிகரை அடையாளப்படுத்தும் போது அந்த பகுதியில் குறைவாக உள்ள மற்ற ஜாதியினர், தங்கள் இனத்திலும் யாராவது நடிகன் இருக்கிறானா என்று தேடிப்பிடித்து இது போன்று செய்கிறார்கள். அப்படி செய்தது தான் சசிக்குமாரின் படம். சில நாட்கள் முன்பு ஆசாரி இன மக்களின் போஸ்டரில் எம்.கே.தியாகராஜ பாகவதர் இருந்தார். பிள்ளை சமூக பேனரில் வடிவேலு இருக்கிறார். நம்ம எஸ்.ஜெ.சூர்யா தேவர் மக்களின் வால் போஸ்டர்களை அலங்கரிக்கிறார். விவேக்கை பற்றி நமக்கு தெரியும்.

பல நடிகர்களுக்கும் இது தெரிந்தாலும் அவர்கள் தடை போடுவதில்லை (வரும் காலத்தில் உதவுமே!!!). ஆனால் என் மனதை உறுத்துவது இந்த நடிகர் படங்களோடு இருக்கும் தேசத்தலைவர்களின் படங்கள் தான். காமராஜர் தன் நாடார் இனத்தவன் என்று யாரையும் மதித்து உதவி செய்ததில்லை (தோற்கடிக்கப்பட்டதே அதனால் தானே), முத்துராமலிங்க தேவர் தன் இனம் மட்டும் அல்லாது பிற இனத்தவர்களுக்கும் வாரி வாரி கொடுத்தவர், வ.உ.சி. பிள்ளை இன மக்களுக்காக மட்டும் செக்கிழுக்கவில்லையே? ஆனால் இவர்களை எல்லாம் நடிகர்களோடு சேர்த்து ஒரு ஜாதிக்குள் அடக்கி விடுகிறோமே?

இந்த நடிகர்கள் தங்கள் ஜாதிக்காக இதுவரை என்ன செய்துள்ளார்கள்?

சரத்குமார், காமராஜருக்கு விருதுநகர் அருகே மணி மண்டபம் கட்டுவதாக சொல்லி ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு ம**ரையும் அவர் புடுங்க வில்லை.

எங்கள் ஊர் கிராம பகுதி தேவர் மாணவன் ஒவ்வொருவனும் அவன் பள்ளி ஆண்டுவிழாவிலோ, ஊர் அல்லது வீட்டு விழாவிலோ "ஐசாலக்கடி மெட்டு தானுங்கோ" பாடலுக்கு கண்டிப்பாக நடனம் ஆடியிருப்பான். அந்த அளவிற்கு அவர் மேல் பைத்தியம் உள்ளவர்கள். இப்போதும் லோக்கல் கேபிள் டிவியில் இவர் பாடல்களே அதிகம் விரும்பப்படும் பாடல்கள். ஆனால் இப்படிப்பட்ட தன் ஜாதிக்காரர்களை காமெடி பீஸ் ஆக்கிய பெருமை கட்சி ஆரம்பித்ததோடு தூங்கப்போய்விட்ட கார்திக்கையே சாரும்.

ஆனால் இவர்கள் இருவரும் தங்கள் ஜாதி மக்களை படம் ஓடுவதற்கும் அரசியலுக்கும் மட்டுமே பயன் படுத்திக்கொண்டார்கள். அந்த இனத்திற்கு அவர்கள் துளி கூட அப்பட்ட இருந்ததில்லை. இப்படி இருக்கும் போது எந்த நம்பிக்கையில் தங்கள் ஜாதியை சேர்ந்த நடிகர்களை மக்கள் கண்டுபிடித்து தங்கள் இல்ல நிகழ்ச்சிகளில் இவர்களின் படங்களை பயன்படுத்துகிறார்கள்?

நடிகர்கள் பொதுவானவர்கள். அவர்கள் ஜாதிக்காரன் மட்டும் பார்த்தால் போதும் என்று நினைத்து அவர்கள் படம் நடிப்பதில்லை. அப்படி எடுத்தால் ஒரு நடிகனின் படம் கூட ஓடாது. இப்படி ஜாதி ரீதியாக ஒரு நடிகன் பிரித்துப்பார்கப்பட்டால் அது அவரின் மேல் மற்ற போட்டி ஜாதி ரசிகர்களின் வெறுப்பை உண்டாக்கிவிடும். இன்றைய இளம் நடிகர்கள் இதை உணர்ந்து ஜாதி ரீதியாக தங்களுக்கு உள்ள ரசிகர் மன்றங்களையும், தன சொந்த ஜாதி ஆதரவாளராக தங்களை காட்டிக்கொள்வதையும் நிறுத்திக்கொண்டால் அவர்களின் நிம்மதிக்கு உத்திரவாதம் கிடைக்கும். இல்லாவிட்டால் சரத்குமாரை போலவும், கார்த்திக்கை போலவும் அவர்களும் வருங்காலத்தில் "உங்க ஜட்ஜுமேண்டு ரொம்ப வீக்கு" என்று தங்கள் சொந்த ஜாதிக்காரர்களாயே தூக்கி எறியப்படுவார்கள். சசிக்குமாரும் இதை உணர்ந்து நடந்துகொள்வார் என்று எதிர் பார்ப்போம்.

17 comments

  1. ப்ளெக்ஸ் போர்டி ந உடனே ஞாபகம வருது ... ரெண்டு வாரம் முன்னாடி ஒரு ப்ளெக்ஸ் போர்ட பார்த்தேன் அதுல வீரப்பன் படம் அவரும் ப சிதம்பரம் மு சேர்ந்து மணமக்களை வாழ்த்துறாங்க ............. என்ன கொடும சார் இது ?????????? ஐயோ ஐயோ

    ReplyDelete
  2. veerappan mela avangaluku enna koban? yedhuku avara ipdi asinga paduthuranga?

    ReplyDelete
  3. இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா .. அப்படி தலைவர்கள் பொதுவாக பாடுபட்டார்கள் என குறிப்பிடுவது தவறு என கூற விரும்புகிறேன்.. 1960 களில் பேரையூரில் நடந்த ஒரு கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர், "என்ன ஆனாலும் சாணான் பயலுக்குள்ள ஒற்றும உங்களுக்கு வரதுலே" என்று கூறியது வரலாறு. மேலும் முதுகுளத்தூர் கலவரங்களை தணிக்க, மறவர் இனத்தின் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் கை எழுத்து இடாததன் காரணம் : தேவேந்திர குல வேளாளர்களின் சார்பில் அன்று இம்மானுவேல் சேகரன் வந்ததால் தான் என்பதும் உண்மை. காமராஜரும் முத்துராமலிங்கத் தேவரும் MP & MLA இரண்டுக்கும் போட்டியிடுவது வழக்கம். இருப்பினும் காமராஜர் முதல்வர் ஆகினால் தான் MLA பதவியை ராஜினாமா செய்வார். இந்நிலையில் தலைவர்கள் ஜாதியை வெறுத்தார்கள் என்று சொல்லும் மனநிலை மாயை. காமராஜரும் பட்டியலில் இருந்த நாடார் சமுகத்தை BC யாக அறிவித்ததை ஒப்புக்கொள்ள வேண்டும்.. இதற்கு விதி விலக்கு வ.உ.சி மட்டுமே. ஏனெனில் அவர் சுதந்திரத்திற்கு பின்னர் உயிரோடு இல்லை..

    ReplyDelete
    Replies
    1. எந்த பட்டியலில் இருந்தோம்,அப்படி இருந்திருந்தால் நாங்கள் இன்னும் உயர்ந்திருப்போம்,காமராசர் ஐயா அனைவருக்கும் பொதுவாக தான் நடந்தார்.முதலில் பரமேஸ்வரன் என்கிற பரையரை இந்துஅறநலதுறை அமைச்சராக நியமித்தார்.ஏன் அப்பொழுது என்ன சாதி ஓட்டுக்காகவா நியமித்தார்.கக்கன் போலிஸ் மந்திரியாக இருக்கும் போது முதல்வர் காமராசர் கக்கனை தடுத்திருக்கலாம் ஆனால் ஏன்அவர் தலையிடவில்லை,சுதந்திரமாக தனது பதவியில் முடிவெடுக்க உத்தரவிட்டார்.இன்னொரு விசயம் முதுகளத்தூர் பிரச்சனை வரவில்லை என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னும் மற்ற சமுதாயம் முன் நிமிர்ந்துருக்க மாட்டார்கள்..ஏதாவது ஒரு பொது கூட்டத்தில் சாதியையோ,மதத்தையும் பற்றி பேசியதாக வரலாறு உண்டா?நல்லவர்களை பழிக்காதீர்கள்...

      Delete
  4. //மறவர் இனத்தின் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் கை எழுத்து இடாததன் காரணம் ///

    பார்வர்ட் பிளாக் கட்சியில் பல சானார் (நாடார்) மக்கள் பணி செய்து இருந்திருக்கிறார்கள். தவறு செய்யும் போது அதை கடுமையாக் கண்டிக்கும் குணம் கொண்டவர் தான் தேவர். அவரின் தியாக உணர்விற்கு நம் சமூகத்தில் உதாரணம் சொல்வது அரிது. மேலும் சாதி என்பது ஒரு கட்டமைப்பு தான். மேலும் அது தொழில் சார்ந்தது. இன்று மாறியிருக்கிறது. நான் வேண்டும், தாய் தந்தை வேண்டும், வீடு,ஊர்தி இருக்கலாம், கல்யாணம், பெயர் சூட்டல்,காதுகுத்து இருக்கலாம்,மொழி இருக்கலாம், மாநிலம்,நாடு இருக்கலாம், கண்டம் எல்லாம் இருக்கலாம். ஆனால் சொந்த பந்தம் என்ற ஒரு இயற்கையான கூட்டிணைவு என்பது மட்டும் இருக்கக் கூடாது என்ற முட்டாள் தனத்தை மூளை சலவையை, சாதி என்ற ஒற்றை சொல்லின் அடிப்படையில் தவறு என சித்தரித்தது, அதை திறம்பட பரப்புரை செய்தது இந்த ஆங்கிலிய அம்மாவிடம் இருந்து பிறந்த திராவிடக் கட்சிகள். இதை பிரிவுககளை புரிந்து கொண்டால் மட்டுமே, பிரிவினைகள் கடந்த மனிதத்தை மலர்விக்க முடியும். ஏனையவை எல்லாம் நாம் எதிர்பார்க்கும் சமூக ஒழுங்கை ஏற்படுத்தாது.

    மேலும் சில தெளிவுகளுக்கு:http://pasumponayya.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. சானார் மக்கள் மட்டும் தான் தவறு செய்வார்களா?காமராசர் உயர்ந்து விட்டார் என்ற காழ்புணர்ச்சியோடு செயல்பட்ட தேவர்,காங்கிரசில் இருந்து விலகி பார்வர்டு பிளாக் கட்சியில் அவரே ராசா,அவரே மந்திரி போல செயல்பட்டார்.தேவருக்காக எந்த சான்றோரும் பார்வர்டு பிளாக் கட்சியில் சேரவில்லை,தெய்வதிருமகனார் நேதாஜிக்காக சேர்ந்தனர்.அதோடு இல்லாமல் தேவர் எதற்காக அரசியல் களம் இறங்கினார்,தன் சாதி மக்கள் மீது உள்ள குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்க தான் அவர் போராட்டம் செய்து சிறை சென்றார் தவிர சுதந்திர போராட்டத்தில் எத்தனை வருடங்கள் சிறை இருந்தார்.தாழ்த்தப்பட்ட மக்களை மீனாட்சி கோவிலில் கூட்டி செல்ல காங்கிரஸ் திட்டம் கொண்டு வந்த போது அதற்கு தடையாக இருந்த உங்கள் இனத்தை சார்ந்த மறவர்களை தடுக்க தான் அவரிடம் கேட்டனர் இதிலிருந்து என்ன புரிகிறது இன்னொருவர் கொண்டு வந்த்தை உதவி செய்தார்,அதோடு இல்லாமல் ஆங்கிலேயனுக்கும்,நாயக்கர் மன்னர்கள் காலத்தில் தான் மறவர் என்ற பிரிவினர அவர்களுக்கு அடிமையாக ஆட்சி செய்தீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.அதற்கு விளக்கம்,புதுக்கோட்டை மன்னர் கள்ளர் பிரிவை சார்ந்த தொண்டைமான் வீரபாண்டியன் மன்னனை காட்டி கொடுத்தது,இராமநாதபுரம் சேதுபதி மன்னர் மறவர் ஆங்கிலேயர் தலைமை செயலகமே இராமநாதபுரம் அரண்மனை தான் அப்படி இருக்க எதை வைத்து நீங்கள் ஆண்ட பரம்பரை,ஆங்கிலேயரை எதிர்த்த பரம்பரை,தேவர் தன் சாதி மக்களுக்காக தான் போராடினார்,மற்றும் அவர் நின்ற தொகுதியில் ஏதாவது ஒரு நல்லது செய்தாரா?சிந்தியுங்கள் பதிலளியுங்கள்

      Delete
  5. saathiye olikkave mudiyatho naanum thevar thaan enga oorla ella payalum ajith rasicar.....naan mattum vijay
    athenale ella payalukkum enna pudikathu....

    ReplyDelete
  6. //முத்துராமலிங்க தேவர் தன் இனம் மட்டும் அல்லாது பிற இனத்தவர்களுக்கும் வாரி வாரி கொடுத்தவர்//...

    பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்....

    * தனது சொத்தை 17 பங்கா போட்டு அதை தாழ்த்தப்பட்ட இருவருக்கு இரண்டு பங்கை எழுதி வைத்துவிட்டு, ஒரு பங்கை தனக்கென வைத்துகொண்டு, மீதம் உள்ளதை அவரது சொந்தங்களுக்கே எழுதி வைத்தார் முத்துராமலிங்கம். --- இதுல எங்க நீங்க சொல்ற 'வாரி வளங்குன' கதை வருது.... ஓகோ....அந்த ரெண்டு பங்கு தாழ்த்தப்பட்டவங்களுக்கு கொடுத்ததை சொல்றீங்களா? அப்படின்னா மேல படிங்க...

    * அப்படி கொடுத்த அத்தனை சொத்துகளையும் (தனது சொந்தகள் இருவர் நீங்கலாக), மீண்டும் தான் நிறுவிய அறக்கட்டளைக்கு எழுதி தர கோரி, எழுதியும் வாங்கி விட்டார். --- கொடுத்ததை பெருமையா சொல்ற ஆட்க, ஏன் அதை 'கொல்லைபுறமா' திரும்பவும் வாங்குனதை சொல்லல...?

    ReplyDelete
    Replies
    1. இது உண்மையா boss

      Delete
    2. வினவு தளம் படிங்க

      Delete
    3. வினவு தளம் படிங்க

      Delete
    4. வினவு தலித்களுக்காகக இயங்கும் தளம்

      Delete
    5. பயன்பாட்டில் உள்ள சொத்துக்கள் ஏராளம். சில பகுதியை மட்டும் விருப்பபட்டு கொடுத்து உள்ளனர்.

      Delete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. தேவையற்ற கமெண்டுகளை நீக்கிவிடவும் இது இந்த வலை தளம் சிறப்புற நலம் பயக்கும்

    ReplyDelete
  10. தேவர் இன மக்கள் மிகவும் நல்ல வீரர்கள்

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One